a

Wednesday, 22 November 2017

மெர்சல் படத்தை மிஞ்சிய கதை

டெங்குவுக்கு பலியான சிறுமியின் சிகிச்சைக் கட்டணமாக இலங்கைப் பெறுமதியில் சுமார் முப்பத்தைந்து இலட்ச ரூபாவைக் கோரிய வைத்தியசாலை மீது சமூக வலைதளங்கள் உட்பட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் வசித்து வந்த அத்யா சிங் (7) என்ற சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் டெங்குவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைகளுக்காக அவர் ‘ஃபோர்டிஸ்’ என்ற தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அத்யாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஏழு வயது மகளைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த அந்தக் குடும்பத்தாரிடம் இந்தியப் பெறுமதியில் பதினாறு இலட்ச ரூபாய் கட்டணமாகச் செலுத்துமாறு இருபது பக்கங்கள் அடங்கிய பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. இதனால் நொறுங்கிப்போன அந்தக் குடும்பம், வேறு வழியின்றி குறித்த கட்டணத்தைச் செலுத்தியது.
இந்த விவகாரத்தை அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் ட்விட்டரில் அண்மையில் வெளியிட்டிருந்தார். வெளியான சில நிமிடங்களில் பத்தாயிரம் முறைக்கும் மேலாக அந்த ட்வீட் மீள்பதிவிடப்பட்டது. மேலும், குறித்த வைத்தியசாலை மீதான கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
“எனது மகளின் உயிரற்ற உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு அம்பியுலன்ஸைத் தரவும் வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. மகள் இறக்கும்போது அணிந்திருந்த வைத்தியசாலையின் ஆடையையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி கூறியது எம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது” என்று அத்யாவின் தந்தை ஜெயந்த் சிங் தெரிவித்துள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Blog Archive