a

Tuesday, 11 December 2018

பிரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு

நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.

இதன்போது பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மஞ்சள் ஆடைப் போராட்டங்களினதும் மக்களினதும் கோரிக்கைகளிற்கான பதில்களை தெளிவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் ஆடைப் போராளிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக SMIC அதிகரிப்பு இருந்தது. இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 2019 ஆண்டு ஜனவரியிலிருந்து, SMIC (அடிப்படைச் சம்பளம்) சம்பளமானது 100 யூரோவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். இந்த 100€ அதிகரிப்பிற்கு முதலாளிகள் அரசிற்கு எந்தவிதமான வரிகளையும் (charges patronales) கட்ட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட வேலை நேரத்திற்கு அதிகமாக செய்யப்படும் மேலதிக மணித்தியாலங்களிற்கு (heures supplémentaires) வருமான வரியும் அரசிற்கான கழிவுகளும் (charges) 2019 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Blog Archive