a

Thursday, 8 November 2018

தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும்

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுதியான நிகழ்ச்சி நிரலொன்று இன்றி செயற்பட்டமையே தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான இன்றைய கையறு நிலைக்கு காரணம் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

எனின் நடந்து முடிந்துவிட்ட இந்த விடையங்கள் குறித்து கதைத்துக்கொண்டிருப்பதை விடுத்து, இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந்தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை தமிழர் தரப்பு முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை போர் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியை பிடிக்க முற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்ததில் இடம்பெற்ற போர் குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமதிருந்தார்.

இதனால் ஸ்ரீலங்காவில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் குழப்ப நிலை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை ஸ்ரீலங்காவின் தற்போதைய அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்து தான், நாம் அவர்களுடன் கரம் கோத்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து உலகுக்கு நல்லாட்சி என்றோம். ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம். அரசியல் அமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும் அரசியல் அபிலாஷைகளையும்

கரைத்துவிட்டோம். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இன்றி தமக்கிடையில் ஒரு அதிகார போட்டியில் இறங்கியுள்ளனர்.

தான் உயிருடன் இருக்கும் வரை வட கிழக்கு இணைப்புக்கோ சமஷ்டித் தீர்வுக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். அவரை வைவதால் ஆவது ஒன்றுமில்லை.அவருடன் சேர்ந்து பேசுவதாலும் எதுவும் ஆகப்போவதில்லை. சர்வதேசங்கள் தான் இதுபற்றி கவனஞ் செலுத்த வேண்டும். ஒரு நிகழ்ச்சிநிரல் இன்றி செயற்பட்டமையே இன்றைய எமது இந்த கையறு நிலைக்கு காரணமாகும். எது எவ்வாறெனினும், நடந்தவை நடந்து முடிந்துவிட்டன. இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந் தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும்.இருட்டில்

கையாட்டிப் பார்க்காமல் பாதை தெரிந்து பயணிக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் உண்மையான மனோநிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார் தடைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமன் என்பதைப் புரிந்துகொண்டு காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஸ்ரீலங்காவில் எவர் ஆட்சியில் உள்ளார்கள் என்று பார்த்து செயற்படாது பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை அரசு என்ற ரீதியில் போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியும். இதனால் புரிந்துணர்வை ஏற்படுத்தி உண்மையான இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.
Share:
Read More

Wednesday, 7 November 2018

சமுக நீதி பேசுபவர்களை சைமன், டேனியல் என்று அழைக்கிறார்கள், ஏன்?

 சமுக நீதி பேசுபவர்களை சைமன், டேனியல் என்று அழைக்கிறார்கள், ஏன்?
Share:
Read More

சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் புகைப்படம்

சமீபத்தில் சீக்கியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது புகைப்படம் கொண்ட பதாதைகள் காணப்பட்டது. அதில் சீக்கிய தலைவரது புகைப்படம், தமிழ் தலைவரது புகைப்படத்தில் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதாவது வேற்றின மக்களை பொறுத்தவரை, தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடியது தலைவர் பிரபாகரன் என்பதே அவர்கள் புரிந்துகொண்ட விடையம்.

அட வேற்றின மக்களே இதனை நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் சில பல அரசியல்வாதிகள் தாம் 40 ஆண்டுகாலமாக அரசியலில் செய்வதாக பீற்றிகொள்கிறார்கள். இது தான் வேடிக்கையான விடையம்.
Share:
Read More

Popular Posts

Recent Posts

Blog Archive