a

Thursday, 12 October 2017

இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள்

உலகில் மிக மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐ,எஸ் கருதப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, அவர்கள் காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள் தற்போது உலகிற்கு மெல்ல மெல்ல தெரியவர ஆரம்பித்துள்ளது. காட்டு மிராண்டிகள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார், இவர்களிடம் தப்பிப் பிழைத்த ஒரு பெண். தங்களை சிறு வயதிலேயே ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்ததாகவும். நூற்றுக்கணக்கான பெண்களை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எங்களை பிடித்து சுவர் ஒன்றின் ஓரமாக நிறுத்தி மேலாடைகளை தூக்கி மார்பங்கள் இருக்கா என்று பார்ப்பார்கள்.

மார்பகம் இருக்கும் பெண்களை பிடித்து அவர்களை வேறு ஆண்கள் கற்பழிக்க என அனுப்பிவிடுவார்கள். இன்னும் மார்பகம் வராத பெண்களை மீண்டும் 3 மாத சிறைக்குள் அடைத்து விடுவார்கள் என்று தப்பி வந்த பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவ்வளவு காட்டு மிராண்டியாக இவர்கள் இருப்பார்கள் என்று தான் நினைக்கவே இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு தனி தேசம் ஒன்றை கட்டி எழுப்பப் போகிறோம் என்று கூறி. தாம் போராடுவதாக பரப்புரை செய்து பல ஆண்களை இவர்கள் கவர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெண்களை விருந்தாகப் படைத்து. கையில் ஆயுதங்களை கொடுத்து இவர்கள் சண்டையில் ஈடுபட வைக்கிறார்கள். தங்களிடம் வந்தால். ஜாலியாக இருக்கலாம் என்பது தான் இவர்கள் சொல்லும் சுலோகமாக உள்ளது. இவர்கள் ஒரு விடுதலை இயக்கமா ? விடுதலை இயக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை , புலிகள் தமது கட்டுப் பாட்டின் மூலம் உணர்த்தினார்கள். அமெரிக்கா தொடக்கம் பல உலக நாடுகள், புலிகளை தீவிரவாத பட்டியலில் இட்டால் கூட. அவர்கள் ஒழுக்கம் பற்றி இன்றுவரை மெச்சியுள்ளார்கள். இது தமிழர்கள் பெருமைப்படும் விடையங்களில் ஒன்று தான்
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Blog Archive