a

Monday, 25 April 2011

பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:

4 comments:

  1. அருமையா இருக்கு, கர்த்தர் நல்லவர்....அவர் கிருபை என்றுமுள்ளது.....

    ReplyDelete
  2. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

    ReplyDelete
  3. அம்பாளடியாள்@@@@@சகோதரரே தாமதத்து மன்னிக்கவும் .உங்களது மனவேதனை எதுவாக இருந்தாலும் ஒரு நண்பனிடம் கூறுவது போல ஜேசுவிடம் சொல்லிவிடவும் .கண்டிப்பாக ஏதாவது ஒருவழியில் கர்த்தர் உதவி செய்வார்.மறு நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத தமிழ் ஈழ யுத்த களத்தில் அற்புதமாக என்னை காப்பாற்றியவர்.

    ReplyDelete
  4. நன்றி நாஞ்சில் மனோ@@ உண்மையாகவே ..அவர் கிருபை என்றுமுள்ளது...நல்ல கருத்து என் வாழ்கையிலும் பல அற்புதங்கள் செய்துள்ளார் தங்களது கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive